Date:

மின்னுற்பத்திக்கான டீசல் பாவனையால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய மாதாந்தம் அரசாங்கத்திற்கு சுமார் 600 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மின்னுற்பத்திக்கான விசேட எண்ணெய் மற்றும் டீசல் என்பன பயன்படுத்தப்பட்டுக் குறித்த மின்முனையம் இயக்கப்பட வேண்டும்.

டீசல் மற்றும் மின்னுற்பத்திக்கான விசேட எண்ணெய் என்பன பயன்படுத்தப்பட்டு, மின்னுற்பத்தியினை மேற்கொள்வதன் ஊடாக இலாபம் அடைய முடியும் என மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மின்னுற்பத்திக்கான எண்ணெய்யை மாத்திரம் பயன்படுத்திக் குறித்த மின்முனையத்தை இயக்குவதன் மூலம் அதிக இலாபம் அடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் டீசல் மற்றும் மின்னுற்பத்திக்கான எண்ணெய் என்பன பயன்படுத்தப்பட்டு களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் இயக்கப்பட்டது.

எவ்வாறாயினும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் தற்போது களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றது.

எனவே, மின்னுற்பத்திக்கான எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் குறித்த மின்முனையத்தை இலாபத்துடன் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று மீண்டும் பரிசீலிக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...