எதிர்வரும் முதலாம் திகதி இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பல தடவைகள் மின்சார சபையின் தலைவராக பதவி வகித்த எம்.எம்.சி. பேர்டினாண்டோ, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
இதன் காரணமாக, இவரின் செயற்பாடு தொடர்பில் மின் பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.