Date:

எரிபொருள் கையிருப்பு முடிந்தது-மின்சார சபை

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் காலாவதியாகும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம் மாத்திரமே எரிபொருள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று டீசல் மற்றும் எரிபொருள் கிடைக்காவிட்டால் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் எனவும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, எதிர்வரும் 27ம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியம் கிடையாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை, மீண்டும் 27ம் திகதி பரிசீலிக்க போவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாயினும், எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கைவசம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...