Date:

நின்றுக்கொண்டு பயணிக்கும் பயணிகளிடம் குறைவான கட்டணம்? − பஸ் உரிமையாளர்களும் இணக்கம்

ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என நிபந்தனையின் பிரகாரமே, பஸ் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

எனினும், பல்வேறு காரணங்களினால் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமான பயணிகள் பஸ்களில் பயணிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, நின்றுக்கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்தும் கெமுணு விஜேரத்ன இதன்போது கருத்துரைத்தார்.

ஆசன எண்ணிக்கையின் பிரகாரம், பயணிகளை அழைத்து செல்வதற்கு தாமும் இணக்கம் என அவர் கூறினார்.

எனினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், பஸ்களுக்கான சரியான நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு நேர அட்டவணை தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனை அமுல்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சரியான முறைமையொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில், ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை அழைத்து செல்ல தாமும் தயார் என கெமுணு விஜேரத்ன குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...