Date:

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும்

எதிர்வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்தமையால் சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படுவதாக தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்தார்.

அத்துடன் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

தற்போது சந்தையில் ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 700 ரூபாவரையில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் தேங்காய் எண்ணெய்க்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய தரத்துடன் இல்லை என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...