Date:

இரண்டரை நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை இல்லை

தற்போதைய நிலையின் கீழ் மேலும் இரண்டரை நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை இல்லை என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெய் மற்றும் டீசல் என்பன தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

மின்சாரத்தை துண்டிக்காதிருப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் மாலபே, பாணந்துரை, மஹரகம மற்றும் கனேமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார துண்டிப்புக்காக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய பொது பயன்பாட்டு ஆணைக்குழு இன்று தமது பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.

தேவை ஏற்படின் மூன்று கட்டங்களாக மின்சாரத்தை துண்டிப்பதற்கான அனுமதியை பெற்று தருமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களுக்கு அமைய மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை இல்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சார துண்டிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

துண்டிப்பின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...