வைத்தியசாலைகளில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் கோவிட் பரிசோதனைகளில் நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் கோவிட் ஒழிப்பு ராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகளை எளிதில் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 40 சிறார்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.வீஜேசூரிய தெரிவித்துள்ளார்.