Weather Alert இன்று முதல் கடும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று முதல் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

News Alert முன்னாள் அமைச்சர் அகில விராஜ் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது இன்று (5) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றுள்ளது. பரஸ்பர நலன்...