Date:

கொழும்பு மெரினா நடைபாதையில் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்கு அறவிடப்படும் கட்டண விபரம்

கொழும்பு போர்ட் சிட்டியினால் கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2-5 பேர் பங்கேற்புடன் குறித்த பின்னணியைப் பயன்படுத்தி 3 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக புகைப்படம் எடுப்பதற்கு 30, 000 ரூபா கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும், 1 – 3 மணித்தியாலங்களுக்குள் 6 – 10 பேர் படப்பிடிப்பில் ஈடுபட்டால், 50,000 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது.

அத்துடன், 10 க்கும் மேற்பட்டவர்கள் மூன்று மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் படப்பிடிப்பில் ஈடுபட்டால் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என குறித்த கட்டணப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 10 பேருக்கு மேல் வர்த்தக நோக்கில் படப்பிடிப்பில் ஈடுபட்டால், மூன்று மணித்தியாலங்களுக்கு குறைவான நேரத்துக்காக கட்டணத்தை பேசித் தீர்மானிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10 பேருக்கும் குறைவான எண்ணிக்கையிலானோர், ஒன்று முதல் 3 மணித்தியாலங்களுக்குள் படப்பிடிப்பில் ஈடுபடுவதாயின் ஒரு இலட்சம் ரூபா கட்டணமாக வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...