Date:

மின் துண்டிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாட்டில் அமைந்துள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயங்குவதற்கு தேவையான எரிபொருள் இன்மையால் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் குழு உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

நாளாந்த மின் உற்பத்திக்கு அத்தியாவசியமான எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேர அட்டவணை தொடர்பில் அவர் அறிவித்தார்.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டகங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய மற்றும் அவசரகால பொது சேவை பகுதிகளுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...