9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது அமர்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது, முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ளது.
அந்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.