இன்றிரவு மின் துண்டிப்பை அமுலாக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில், இலங்கை மின்சார சபை இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.இன்று விடுமுறை தினம் என்பதால், மின்சாரத்துக்கான கேள்வி குறைந்த அளவில் உள்ளமையால், இரவு வேளையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், உறுதியாக குறிப்பிடமுடியாதுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.