நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,174 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 07 ஆண்களும், 04 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.