நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து, ஜனாதிபதி ஆற்றும் கொள்கை விளக்க உரை தொடர்பில், இரண்டு நாட்கள் விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கொள்கை விளக்க உரையை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில், ஜனவரி 19ஆம், 20ஆம் திகதிகளில் விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.