Date:

சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து மக்கள் வங்கி நீக்கம்

கடந்த ஒக்டோபர் மாதம்,சீன நிறுவனமொன்றினால் இறக்குமதி செய்யத் தீர்மானித்த பணம் சேலுத்த்துகையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

 

சீனாவின் குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்ட சேதன உரத்திற்கான கடன் கடிதங்கள் மக்கள் வங்கியின் ஊடாக வௌியிடப்பட்டன. இலங்கையின் தாவர தனிமைப்படுத்தல் சேவை, உர மாதிரிகளை பரிசோதித்த பின்னர், உர மாதிரிகளில் அர்வினியா பக்டீரியா இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் குறித்த நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அத்தோடு கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தனது கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பின் 26ஆவது மேயராக பல்த்தசார் பதவியேற்றார்

கொழும்பு மாநகர சபையின் (CMC) 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின்...

இன்று 3.30க்கு அவசர விவாதம்

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து இன்று புதன்கிழமை (18) பிற்பகல் 3.30 மணிக்கு...

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்...

கொலன்னாவ நகர சபையும் திசைகாட்டி வசம்!

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18)...