“சிறிய ஜெனரேட்டர்கள், மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிக நன்மையை ஏற்படுத்தும், ஏனென்றால் முழு நாடும் இருளில் மூழ்கும் நாள் மிக விரைவில் உள்ளது.” என இலங்கை மின் ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்ஜன் ஜயலால் நேற்று கூறியுள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மின்கட்டணம் செலுத்துவதாகவும், மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் ஒரு கிராமம் இருளில் மூழ்கியதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எரிபொருளைக் கடனாகப் பெற்றதாகத் தகவல்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை நிர்வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களே, தவிர ஊழியர்கள் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.