இலங்கையில் ஓமிக்ரோன் தீவிரம் அடைந்து வரும் நிலையை கருத்திற் கொண்டு அடுத்த சில வாரங்களில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு சுகாதாரப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதைத் துரிதப்படுத்து மாறும், ஒவ்வொரு பிரிவிலும் பல புதிய தடுப்பூசி நிலையங்களை இணைக்குமாறும் பிராந்திய மருத்துவ அதிகாரி அலுவலகங்களால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.