Date:

நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின்விநியோகத்தடை!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க முடியாத காரணத்தால், இடைக்கிடையே நாடளாவிய ரீதியில் இன்று(07) மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்றிரவு நாட்டின் சில பாகங்களில் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைப்பதற்கான பணிகள் நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க காலதாமதம் ஏற்படுமென்பதால் இன்றும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று முதல் அமுலுக்கு வரும் ‘ஷொப்பிங் பை’ சட்டம் இதோ!

கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும்...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...

எரிபொருள் விலைகளில் திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...