Date:

டொலர் பற்றாக்குறை- சோள இறக்குமதிக்கு பாதிப்பு

டொலர் பற்றாக்குறை காரணமாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததாக அந்த சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் கமகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், டொலர் பற்றாக்குறை காரணமாக குறித்த சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், சோள இறக்குமதி தாமதமடைந்துள்ளமை காரணமாக, அற்குப் பதிலாக பயிர்ச்செய்கையாளர்களிடமிருந்து சோளப் பயிரைக் கொள்வனவு செய்து கால்நடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிருகவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமத் கமகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...