Date:

கடந்த ஆண்டு 3,000க்கும் அதிகமான சிறுவர் வன்முறை சம்பவங்கள் பதிவு

கடந்த ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 3,373 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவற்றில் 598 முறைப்பாடுகள், 5 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை என்றும், அவர்களில் 252 பேர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு உள்ளான சிறுவர்களில், 1,342 பேர் தமது தந்தையாலும், 718 பேர் தாயாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால், சிறுவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான 98 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில், சிறுவர் வன்முறைகள் தொடர்பில் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 16,395 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுவர் வன்முறைகள் தொடர்பான 19,768 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என...