Date:

ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அதிகரித்தது மாதாந்த சம்பளம்

2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பை பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்றிரவு (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2022 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த ஆண்டு முதல் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக மாதாந்தம் இந்த 5000 ரூபா நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த நிவாரண உதவித் திட்டமானது, ஜனவரி மாதம் முதல்  அமுலுக்குவரும் என பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...