Date:

நாளை மறுதினம் அமைச்சரவை கூட்டம் – நாணய நிதியத்தின் உதவி கோரல் பற்றிய கலந்துரையாடல்

நாளை மறுதினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

 

நாட்டின் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து, அரசியல் களத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

 

இந்த விடயத்தில், அரசாங்கத் தரப்புக்குள் இணக்கப்பாடு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, நாடு தற்போது டொலர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நிலையில், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...