உரத்தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பெரும்பாலும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு அச்சப்படத் தேவையில்லை எனவும் பெரும்போகத்தில் தற்போது 7 இலட்சத்திற்கும் அதிக நிலப்பரப்பில் நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறுபோகத்திற்காக 5 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் செய்கையில் கிடைக்கப்பெற்ற விளைச்சல் 6 மாத காலத்திற்கு போதுமானதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.