Date:

அழகு குறிப்புக்கள்

*காலையும், மாலையும்  ஸ்கின் மொய்ஸ்ரைசர் உபயோகப்படுத்துவதன் மூலம் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.

*உதடுகளில் ஏற்படும் வறட்சியைப் போக்க காலை, மாலை இருவேளை உதடுகளில் வெண்ணெயைப் பூச வேண்டும். ரோஜாப்பூ இதழ்களை பால் விட்டு அரைத்து தடவி வந்தாலும் வெடிப்பு ஏற்படாது.

*தோல் சீவிய வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் நான்கு டீஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ரோஸ் வோட்டர் கலந்து அரைக்க வேண்டும். இதை பேஸ் பேக்காக முகத்தில் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும்.

*பாத வெடிப்பு வராமல் தடுக்க வாரம் ஒருமுறை நீரில் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு, தரமான ஷெம்பு சிறிது கலந்து கால்களை அதனுள் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி ஊற வைக்க வேண்டும். பிறகு ப்யூமிக் ஸ்டோன் கொண்டு பாதத்தை தேய்த்துவிட்டு ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பிறகு மொய்ஸ்ரைஸர் தடவவும்.

*வாழைப்பழம், தேன், பன்னீர் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் வறண்டு போகாமல் இருக்கும்.

*பாசிப்பருப்புடன் ஒரேஞ்ச் பழத்தோல் மற்றும் பால் ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் வறண்டு போகாமல் தடுக்கலாம்.

*குளிக்கும் முன் உடலில் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்து பிறகு குளித்தால் தோல் எளிதில் வறண்டு போகாது.

*தலையின் தோலில் வறட்சி ஏற்பட்டு பொடுகு வராதிருக்க வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...