Date:

அனைத்துப் பிரச்சனைகளையும் இலங்கை அரசாங்கம் குழப்பிக்கொண்டுள்ளது-மைத்திரி

பொருளாதாரம், அரசியல் மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் இலங்கை அரசாங்கம் குழப்பிக்கொண்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்து விதமான பிரச்சனைகளையும் அரசாங்கம் குழப்பிக்கொண்டுள்ளதால், நாட்டு மக்களின் வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும், அரசாங்கம் அங்கு செல்ல மாட்டோம் என்று கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அங்கு சென்றால் ஏதேனும் நிவாரணம் கிடைக்கும் என்றும், தனது ஆட்சிக் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பங்காற்றினேன் என்றும் அதன்போது விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுக்கு தான் இணங்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து அந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...