பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை தாக்கி கொன்ற கொடூரமான மற்றும் நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.
இந்தத் தாக்குதலினால் பாகிஸ்தானின் நற்பெயருக்கு மட்டுமின்றி இஸ்லாத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.