Date:

ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானம்

நாடளாவிய ரீதியில் அனைத்து ரயில்பணிகளில் இருந்தும் விலகி, தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

சில கோரிக்கைகளை முன்வைத்து, தற்போது பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டு விநியோகத்தை தவிர்த்தல் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இன்னும் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறியுள்ளதாகவும், எனவே எதிர்வரும் 26 ம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் பணிகளில் ஈடுபட தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

 

இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தமை காரணமாக, தங்களது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...