Date:

போலியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை மூவர் கைது

நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போரத்தோட்டை பகுதியில் போலியாக பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை தயாரித்து வழங்கி, பணம் பெறும் வியாபாரத்தை முன்னெடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்  விசேட அதிரடியினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியாக தயாரிக்கப்பட்ட 17 பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள், கணினி மற்றும் 5 கையடக்க தொலைபேசிகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்காக இவ்வாறு போலி பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த 21 முதல் 37 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...