பன்னல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் கோழிப்பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் 3000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை 3 மணியளவில் பன்னலயிலுள்ள உள்ள கோழிப்பண்ணையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்த பண்ணையின் கட்டடமும் சேதமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா். இதேவேளை சேத விபரம் தொடர்பில் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.