Date:

யுகதனவி ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது குறித்து அரசு அவசர ஆலோசனை

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்கவென ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்திவருகிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில் அமைச்சர்கள் மூவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், அரசு இந்த அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் தாக்கல்செய்துள்ள சத்தியக்கடதாசிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில்சட்ட மா அதிபர் இதனை தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வளியின் தரம் குறைவு! | முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்..!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட...

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (21.01.2026) நேற்றையதினத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க...

ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக...

ஜப்பான் முன்னாள் பிரதமரின் கொலையாளிக்கு எதிரான தீர்ப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் டேட்சுயா யாமாகாமிக்கு...