Date:

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுமீதான மேலதிக விசாரணைகள் இன்று

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று(17) இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய ஐவர்கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில், இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் விசாரணை தொடரவுள்ளது.

இதேவேளை, யுகதனவி மின்நிலைய உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், அவசியமாயின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கு மின்விநியோகத் தடையை ஏற்படுத்த முடியும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அதன் அரசியல்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...