Date:

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் முழுமையான விபரம்

நாட்டில் இன்று (16) அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியா் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டாா்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டவர். அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மற்றவர் இலங்கையர். மூன்றாவது நபர் அவரருடன் தொடர்பு பேணியவர். இவர்களைப் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்பான தகவல்களை விசாரித்து வருகிறோம். நாட்டில் முதலாவதாக  அடையாளம் காணப்பட்ட நோயாளி தனி நோயாளியாக இருந்தார். ஆனால், இப்போது 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாவதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் நோயாளருக்கு மேலதிகமாக மூவர் அடையாங்காணப்பட்டுள்ளனா். விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளினூடகவே இவர்களில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த  பிரதேசங்களைச் சேர்ந்தர்வர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள என்பது இதுவரையில் தெளிவாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று வெளிநாட்டுக்கு சென்றவருடன் தொடர்பை பேணியவர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...