Date:

“கல்விக்கு கரம் கொடுப்போம்” வருடாந்த வேலைத்திட்டம்

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் இன் வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில்  நுவரெலியா பிரதேச சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான உயர்தர பாடசாலைகள் அனைத்திற்கும் மாதிரி வினாத்தாள்கள் அச்சிட்டு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று (16) நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ்  தலைமையில் கந்தப்பளை மெதடிஸ்த கல்லூரியில் (தேசிய பாடசாலை) முதற்கட்டமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது கா.பொ.த உயர்த்தரத்தில் உள்ள அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் உரிய பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர், கல்லூரியின் அதிபர் ஓம்பிரகாஷ், பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

-டி.சந்ரு செ.திவாகரன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...