Date:

இரசாயன உர பாவனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய செயலணி

இரசாயன உர பாவனையினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியை  உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். அதேநேரம், தற்போது வரையில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, இரசாயன திரவியங்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...