Date:

இரசாயன உர பாவனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய செயலணி

இரசாயன உர பாவனையினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியை  உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். அதேநேரம், தற்போது வரையில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, இரசாயன திரவியங்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...