Date:

டொலர் தட்டுப்பாட்டுக்கு நிவாரணம் கோரி பால்மா இறக்குமதியாளர்கள் கடிதம்

பால்மா இறக்குமதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டொலர் தட்டுப்பாடுக்கு நிவாரணம் கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு வழங்கப்படும் வரையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீதமான பால்மாக்களையே இறக்குமதி செய்ய முடிகின்றது.

அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளில் மீண்டும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினையினால் இறக்குமதிகள் மேலும் மட்டுப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள், ஒளடதம், அத்தியாவசிய உணவு பொருள் ஆகியவற்றின் இறக்குமதிக்காக மாத்திரமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு இணையாக சந்தையில் தேசிய பால்மாக்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் மாகாண சபை ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்கை கருத்தரிப்பு நிறுத்தப்பட்டமை ஆகிய காரணிகளால் தேசிய பால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மனித பாவனைக்கு உதவாத 10,000 கிலோ கிராம் சீனி தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் பின்புறத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சீனி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை டுபாயில் இருந்து கொண்டு வந்ததற்கு இணையாக பொதி செய்து அதனை விற்பனைக்கு தயார்ப்பத்தியிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...