ஒமிக்ரோன் கொவிட் தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்நாட்டினுள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த சில நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பபயணிகளுக்கான பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.