Date:

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இன்றும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினமும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்காரவிற்கு ஆளும் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தாக்க முற்பட்டதாகக் கூறி அவர்கள் இந்த அமர்வு புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற அமர்விலிருந்து வெளியேறியதுடன் நேற்றைய அமர்விலும் அவர்கள் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

அந்த எதிர்ப்பு நடவடிக்கையை இன்றைய தினமும் தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதேநேரம் இது தொடர்பில் கலந்துரையாடுவற்காகக் கட்சியின் செயற்குழு இன்று மாலை கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...