Date:

பிரியந்த குமார தியவடனவின் சடலம் இன்று இலங்கைக்கு

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அவரது தலை முதல் கால் வரையிலான உடற்பாகங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உடலின் உட்பாகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் சியல்கோட்டிலிருந்து லாகூர் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரியந்த குமார தியவடனவின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அத்துடன் இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிரியந்த குமார தியவடன பணியாற்றிய தொழிற்சாலையின் 900 பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதோடு அங்குள்ள பணியாளர்கள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...