Date:

கல்வி அமைச்சின் அறிவித்தலால் அசௌகரியம் ஆசிரியர் சங்கம்

பாடசாலை மாணவர்களின் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தின் காரணமாக, ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த போதியளவு காலம் இல்லை என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமக்கு கிடைக்க வேண்டிய பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி கல்வி கூட்டுறவு பொது சேவைகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை, எதிர்காலத்தில் மேலும் கடுமையாக்கப்படும் என சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவகே தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்கள் கடந்துள்ளபோதிலும், எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் இதுவரையில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...