Date:

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை!

பாதீடு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மற்றும் மாகாண அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கண்டி அலவத்துகொடவில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பொதுச் செயலாளர் அஜித் கே.திலகரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்துக்கான பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மேலதிக கொடுப்பனவு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே, அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர...