Date:

மோடியை சந்திக்கும் பசில்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (02) அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

அதேநேரம், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (01) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தியா தமது பொருளாதார திட்டங்களினூடாக இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டதுடன்,  பதவியேற்றதன் பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள் மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை அவர் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர...