Date:

திடீர் மின் விநியோகத் தடை தொடர்பில் உள்ளக விசாரணை

மின்சார சபை கட்டமைப்பின் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் வெளியேறியமையே, நேற்று ஏற்பட்ட திடீர் மின் தடையை வழமைக்கு கொண்டுவர தாமதமானமைக்கான காரணமாகும் என மின்சார தொழிநுட்ப, பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த மின்தடை இயற்கை காரணங்களால் இடம்பெற்றதா? அல்லது திட்டமிட்ட ஒன்றா? என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.யு நிஸாந்த கோரியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறுவதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ஆர்.எம். ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாட்டின் பல பகுதிகளுக்கு திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துவரும் மின்சார பொறியியலாளர்களின் தலையீட்டுடன் அதனை வழமைக்கு கொண்டு வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ஆர்.எம். ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை...

ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் பிமல்

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து...