Date:

”ஒமிக்ரோன்“ பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும்-ஹேமந்த ஹேரத்

இலங்கையில் ”ஒமிக்ரோன்“ பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த புதிய தொற்று எந்த நேரத்திலும் நாட்டுக்குள் பிரவேசிக்க ஏதுக்கள் உள்ளன.

இந்தநிலையில் நாட்டுக்குள் இந்த தொற்று வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தம்மால் தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்று ஹேமந்த குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் புதிய கோவிட் தொற்றுக் காரணமாக நாட்டில் முடக்கலை பரிந்துரைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பண்டிகை காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளின் சங்கத் தலைவர் உபுல் ரோஹன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் பயணத்தடைகளை விதிக்காதுபோனால், நாட்டில் தீவிர நிலை ஒன்றை தவிர்க்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும்,...

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...