Date:

350 இலட்சம் சமையல் எரிவாயுவில் ஆறு சிலிண்டர்களே வெடித்துள்ளது

லிட்ரோ எரிவாயு நிறுவனம்இ வருடமொன்றுக்கு 350 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தயாரித்து, சந்தைக்கு அனுப்புகின்றது. அதில், ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காத நாடுகளே இல்லை என்றார்.

லாப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களின் ஊடாக, 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும், வீடுகளில்- 12, வியாபார நிலையங்களில்- 9, எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களில்- 2 என விபத்துகள் பதிவாகியுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே, மேற்கண்டவாறு
தெரிவித்த அவர், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக விபத்து
சம்பவிக்காத நாடுகள் ஏதும் கிடையாது என்றார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையில் இருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காக நுகர்வோர் அதிகார சபை எரிவாயு சிலிண்டர், எரிவாயு குழாய், சிலிண்டரில் பொருத்தப்பட்டுள்ள இணைப்பு ஆகியவற்றின் தரங்கள் தொடர்பில், 2012ஆம் ஆண்டு 5 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எரிவாயு சிலிண்டரின் கலவை மற்றும் தரம் தொடர்பில் இலங்கை
பெற்றோலிய கூட்டுத்தாபனமும், தனியார் நிறுவனமும் ஒன்றினைந்து
பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன எனத் தெரிவித்த அவர்,
எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காணப்படும் சர்ச்சைக்கு இன்னும் இரண்டு
வார காலத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.

எரிவாயு சிலிண்டரின் தரத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிடல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பிலான சட்டத்தை அமுல்படுத்தல்
தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த

அவர், எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும்
விபத்துக்களை முழுமையாக இல்லாதொழிப்பது அரசாங்கத்தின் பிரதான
இலக்காகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...