Date:

பொலிஸ் மா அதிபரை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கில் சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காகவே பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்னவுக்கு மூன்று நீதிபதிகளை கொண்ட கொழும்பு “ட்ரயல் அட் பார்” நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதியன்று மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும், அதனை உதாசீனம் செய்த குற்றச்சாட்டே பூஜித் ஜெயசுந்தர மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...