Date:

தொடரும் எரிவாயு வெடிப்பு சம்பவம்

நிக்கவெரட்டிய, கந்தேகெதர பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் குறித்த வீட்டில்  பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்பு சம்பவத்தின் போது தாயும் தந்தையும் வயல்வெளிக்கு சென்றிருந்ததாகவும், மூத்த பிள்ளை பாடசாலையிலும் இரண்டாவது பிள்ளை உறவினர் வீட்டில் இருந்ததாலும் எவ்வித உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு தாங்கி வெடித்ததால் ஏற்பட்ட தீயினால் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளன. எரிவாயு வெடித்ததால் ஏற்பட்ட வாயு கசிவினாலா அல்லது வேறு காரணத்தினால் இந்த சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாா் தெரிவித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...