தலவாக்கலை ராணிவத்தை பிரதான வீதியில் மெல்டன் தோட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்தின் போது வேனில் சாரதி மட்டுமே இருந்துள்ளதாகவும் சாரதி காயங்கள் இன்றி உயர்தப்பியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, அதிக பணிமூட்டமான காலநிலை இருப்பதால் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என்றும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர் -நசார்-