Date:

‘சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரும்’: லிட்ரோ நிறுவனம்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக 8 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானக பதிரத்ன தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் விறகுத் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஆறு தினங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிறைவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என...