உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2025, 2026 ‘மஹா’ பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் அளவு, நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.
இதன் காரணமாக, எதிர்வரும் 2026 மே மாதம் முதல் இந்த அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயத் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியன சுட்டிக்காட்டியுள்ளன.
இதனை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.






