Date:

எரிபொருள் விலையேற்றத்தால் பொதுப் போக்குவரத்து இலவசம்

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலியாவின் இரண்டு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாண அதிகாரிகளினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை உயர்வால் எரிபொருளுக்காகச் செலவிட வேண்டிய தொகை அதிகரிப்பதன் மூலம், குடும்பச் செலவுகள் உயர்ந்து மக்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாணங்களில் வசிப்பவர்கள் ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். விக்டோரியா மாகாணத்தில் ஒரு மாத காலத்திற்கும், டாஸ்மேனியா மாகாணத்தில் நாளை (30) முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை…

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த...

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் – IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின்...

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...